புவனகிரி: வாய்க்காலில் டைவ் அடித்த பேருந்து... அதிஷ்டவசமாக தப்பிய பயணிகள்.!
Salem to Chidambaram Govt Bus Accident
சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து, கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்திற்கு சென்று கொண்டு இருந்துள்ளது. இந்த பேருந்தில், சிதம்பரம் செல்லவேண்டிய 30 பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்தனர்.
இந்த பேருந்தை, காட்டுமன்னார்கோவில் பகுதியை சார்ந்த ஓட்டுநர் குபேந்திரன் (வயது 47) என்பவர் இயக்கிய நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் புவனகிரி இரட்டைக்குளம் அருகே பேருந்து வந்துள்ளது. இதன்போது திடீரென நிலைதடுமாறிய பேருந்து, சாலையோரம் உள்ள வாய்க்கால்களில் பாய்ந்தது.
இதனால் பேருந்து இருந்த பயணிகள் அனைவரும் அலறவே, இதனைக்கண்ட பொதுமக்கள் விரைந்து வந்து பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்த நிலையில், இவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Salem to Chidambaram Govt Bus Accident