பெண்ணிடம் அத்துமீறிய தலைமை காவலர்.. ஓடவிட்ட பொதுமக்கள்.. சேலத்தில் அதிர்ச்சி.!
Salem Police Head Constable sexual torture to girl
சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியில், தலைமை காவலர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அந்த நேரத்தில், அங்கிருந்த வீட்டின் கதவை தட்டிய நிலையில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி, சத்தம்போட்டு செருப்பை காண்பித்து எச்சரித்தார்.
பெண்மணியின் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கூட்டமாக திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களை பார்த்ததும் பதறிப்போன தலைமை காவலர், தனது இருசக்கர வாகனத்தை எடுத்துவிட்டு தப்பி சென்றார். இதனையடுத்து மக்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பெண்ணிடம் தலைமை காவலர் அத்துமீறியது தெரியவந்துள்ளது. மேலும், தலைமை காவலர் மது போதையிலும் இருந்துள்ளார். இதனையடுத்து உயர் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Salem Police Head Constable sexual torture to girl