மூதாட்டியிடம் சென்று தகாத வேலை செய்த இளைஞர்.. சற்று நேரத்தில் மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.!
Salem old women abused by Young Men
மூதாட்டியிடம் முத்தம் கேட்ட சம்பவத்தால் சேலம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே மோரூர் பகுதியில் கூலி வேலை செய்யும் மாதையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் நல்ல மதுபோதையில் சுற்றித்திரிந்துள்ளார். அப்பொழுது அவரது இருப்பிடத்திற்கு அருகில் வசிக்கும் ஒரு வயதான மூதாட்டியிடம் சென்று தனக்கு முத்தம் வேண்டும் என்று கேட்டார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அந்த இளைஞரிடம் சண்டை போட்டார். ஆனால் முத்தம் கிடைக்காத விரக்தியில் நல்ல மது போதையில் இருந்த மாதையன் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து அந்த மூதாட்டியை அடித்துள்ளார். இதனால் வலி தாங்காமல் மூதாட்டி கத்திக் கதறிய நிலையில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இளைஞரிடம் இருந்து மூதாட்டியை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து தீவட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட இளைஞனை கைது செய்தனர். அவர் மதுபோதையில் தவறாக நடந்து கொண்டதாக கூறி மன்னிப்பு கேட்டார். ஆனால் அந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாத போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
English Summary
Salem old women abused by Young Men