அழுகிய நிலையில் விடுதியில் தொழிலாளி சடலம்.! போலீசார் விசாரணை
Rotten dead body of worker in hostel mayiladuthurai
மயிலாடுதுறை மாவட்டத்தில் விடுதியில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளி சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பட்டமங்கலம் தெரு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி அறையில் துர்நாற்றம் வீசி உள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், பிணமாக கிடந்தவர் மயிலாடுதுறை விசித்ராயர் தெருவை சேர்ந்த தச்சு தொழிலாளி ஜானகிராமன் (56) என்பதும், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து விடுதியில் தங்கி இருந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஜானகிராமன் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Rotten dead body of worker in hostel mayiladuthurai