#சென்னை || பிளஸ் டூ தேர்வு எழுத வந்த மாணவனை கத்தியால் குத்திய கும்பல்.! இருவர் கைது.!  - Seithipunal
Seithipunal


சென்னை ராயப்பேட்டை அருகே பிளஸ் டூ தேர்வு எழுத வந்த சிறுவனை 2 பேர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு எழுதுவதற்காக பரோலில் வந்த சிறுவனை, முன்பகை காரணமாக மர்ம நபர்கள் கத்தியால் குத்திய இந்த சம்பவத்தில் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராயப்பேட்டையில் கார்த்திக் என்பவரை வெட்டிய வழக்கில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர் கைது செய்யப்பட்டு, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதுவதற்காக சிறை விடுதியிலிருந்து வெளியே வந்த சிறுவன், தேர்வு முடிந்தவுடன் தனது தந்தையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது 2 பேர் கொண்ட கும்பல் சிறுவனை வழிமறித்து கத்தியால் குத்தியது. இதில் படுகாயமடைந்த அந்த சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார், இந்த கார்த்தி என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுவனை கத்தியால் குத்தியது தெரியவந்தது.

இதில், கார்த்தி மற்றும் ஜெயராம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rayapettai school student attempt murder case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->