நாளை ரம்ஜான் பண்டிகை.. சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்ற பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும்.

ஆனால், பிறை எந்த நாளில் தெரியும், எந்த நாட்டில் எந்த நாளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்ற குழப்பம் உலகம் முழுவதும் நிலவி வருகிறது. 

இந்த நிலையில் இன்று வளைகுடா நாடுகளில் பிறை தெரிந்தததால் சிறப்பு தொழுகை செய்து வருகின்றனர். மேலும், நாளை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நாளை (ஏப்ரல் 22ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramzan festival Chennai trains in Sunday time table


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->