கொலை செய்யப்பட்டு பொட்டலமாக கிடந்த தயாரிப்பாளர்.. தொழில் போட்டி காரணமா.?!  - Seithipunal
Seithipunal


இன்று சென்னை கோயம்பேடு விருகம்பாக்கம் சாலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சடலம் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

67 வயதான பாஸ்கரன் என்பவர் ஆதம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது மகனுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வருகிறார். நேற்று அவர் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின், வெகு நேரம் ஆகியும் பாஸ்கரனிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. 

இதனை தொடர்ந்து, தேடி அலைந்த மகன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தியதில், இவர் நிறைய திரைப்படங்களுக்கு பைனான்சியராக இருந்தது தெரியவந்துள்ளது. தனது கட்டுமான தொழிலில் கிடைக்கின்ற லாபங்களை வைத்து திரைப்படங்களுக்கு பைனான்சியர் வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

அத்துடன் இவர் ராம்கி நடித்த சாம்ராட் திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார். தொழில் போட்டி காரணமாக இவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இவர் ஒரு தயாரிப்பாளர் என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramki movie producer baskaran Killed In virugambakkam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->