200 குழந்தைகளுக்கு இலவசமாக சிலம்பம் பயிற்சி.. ராமேஸ்வரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்.!!
Rameswaram old man gives lesson about Silambam for 200 children
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் பகுதியை சார்ந்தவர் கணேசன் (வயது 70). இவர் சிலம்பம் கலையில் சிறந்து விளங்கி வந்துள்ளார். இந்த நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக வருமானத்தை இழந்து தவித்த நிலையில், குழந்தைகளுக்கு இலவசமாக சிலம்பத்தை கற்றுத்தர யோசனை செய்துள்ளார்.
இதனையடுத்து தனக்கு தெரிந்த கலையை எதிர்கால சந்ததியினருக்கு கற்றுத்தரும் பொருட்டு, 70 வயதாகும் கணேசன் அப்பகுதி சுற்றுவட்டார குழந்தைகளுக்கு சிலம்பம் பயிற்றுவித்து வருகிறார்.
இந்த விஷயம் தொடர்பாக கூறுகையில், " பண்டைய தற்காப்பு கலையான 'சிலம்பம் 200 குழந்தைகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறேன்.. நான் தினமும் ரூ.800 சம்பாத்தியம் செய்து வருகிறேன். எனக்கு கொத்தனார் பணிகளும் தெரியும்.
குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலை நேரத்தில் சிலம்பம் வகுப்புகளை எடுத்து வருகிறேன். இந்த கலை நம் எதிர்கால தலைமுறையினருக்கு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த சிலம்பம் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Rameswaram old man gives lesson about Silambam for 200 children