இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்., அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!
ramadoss says about rain water harvesting
மழைநீர் சேமிப்பும் அதன் பயன்கள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு
'மழை எங்கே விழுகிறதோ, அதனை அங்கேயே பிடிக்க வேண்டும்' (catch water where it falls) என்பதுதான் தமிழ்நாட்டுக்கான மிக முக்கியமான தேவை ஆகும். எனவே, அனைத்து பகுதிகளிலும் மழைநீரை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான பிரச்சாரம் மிகவும் அவசரமும் அவசியமும் ஆகும்.
நீர் நிலைகள் மாசுபாட்டை தடுக்க வேண்டும்:
தமிழ்நாட்டில் கழிவுநீர் மேலாண்மை முறையாக மேற்கொள்ளப்படவில்லை. வீடுகளின் கழிவு நீர் மேலாண்மை, நகராட்சிகளால் சேகரிக்கப்படும் கழிவுநீர் மேலாண்மை, தொழிற்சாலைகளின் கழிவுநீர் மேலாண்மை ஆகியவற்றில் பற்றாக்குறை உள்ளது. இவற்றால் ஆறுகளும் நீர்நிலைகளும் மாசுபடுவது தொடர்கிறது. இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குறிப்பாக ஆறுகளும், நீர்நிலைகளும் மாசுபடுவதை போர்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும்.
English Summary
ramadoss says about rain water harvesting