ராஜேந்திரபாலாஜி அடுத்த சிக்கல்.. காவல் துறை எடுத்த அதிரடி முடிவு.? - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக தாகரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் குற்றஞ்சாட்டினர்.

மேலும், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் புகார் அளிக்கவே,  ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன் மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சினிமா பாணியில் கார்களில் மாறிமாறி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் பெங்களூரில் பதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜேந்திரபாலாஜி கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் பெங்களூர் விரைந்துள்ளனர். 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிராக லுக் அவுட் நோட்டிஸ் வழங்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். பணமோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜேந்திரபாலாஜி வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, எந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajendra balaji case police new plan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->