பலத்த காற்றுடன் அதிரடியாக பெய்து வரும் மழை.! போக்குவரத்து பாதிப்பு.!!
rain in ariyalur
தமிழகத்தில் வெயில் இரண்டு மாதங்களாக சுட்டெரித்து வருகிறது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கத்தால் கடுமையான அனல் காற்று வீசி வருகிறது. மேலும் தண்ணீர் பிரச்சினை பொது மக்களின் தீவிர தலைவலியாக மாறியுள்ளது.
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று ஆகியவற்றின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வெப்பநிலையானது படிப்படியாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை இரவு மற்றும் மாலை வேளையில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் செந்துறையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.