தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம்.. நாளை முதல் தொடக்கம்.!
Ragi provided in rationshop from tomorrow in tamilnadu
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் செய்யும் திட்டம் நாளை முதல் தொடங்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பேரிடர் காலங்களில் நிவாரண உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரருக்கு கேழ்வரகு வழங்கப்படும் என அமைச்சர் சட்டபேரவையில் அறிவித்திருந்தார். இதனையடுத்து இந்த திட்டம் நாளை முதல் தொடங்கப்படுகிறது.
இதனை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.
தமிழகம் முழுவதும் வினியோகம் செய்யும் அளவுக்கு கேழ்வரகு இல்லாததால் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் முதன்முறையாக தொடங்கப்படுவதாகவும் அதன் பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Ragi provided in rationshop from tomorrow in tamilnadu