இன்ஸ்டாவில் போலி கணக்கு.. பெண்களுக்கு பகிரங்க மிரட்டல்.. இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போல சிக்கிய காமுகன்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண்கள் பாலியல் பலாத்காரம், வரதட்சணை கொடுமை, நாடககாதல், புகைப்படம் மாபிங் போன்ற பல பிரச்சினைகளால் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். 

இந்த நிலையில், பொறியியல் பட்டதாரி ஒருவர் பெண்களை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவர் பொறியியல் பட்டதாரியாக இருந்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் கணக்கு மூலமாக பல போலி கணக்குகளை துவங்கியுள்ளார். 

இதன் மூலம் பெண்களின் கணக்கில் சென்று, தங்களின் ஆபாசப்படம் தன்னிடம் இருப்பதாகவும், நான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் அந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக சென்னையை சேர்ந்த பெண்மணி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிவகுமாரை கண்டறிந்துள்ளனர். 

இதன் பின்னர், இது குறித்து புதுக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, புதுக்கோட்டையை சேர்ந்த சிவகுமார் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவனிடமிருந்து அலைபேசி மற்றும் லேப்டாப் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவனிடம் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthukottai youngster arrest miss using girl photo by Instagram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->