கர்ப்பிணி பசுவுக்கு வளைகாப்பு நடத்தி நெகிழ்ச்சியடைந்த மக்கள்.!
Pudukkottai Villagers Make Function to Cow Pregnant
கருவுற்று சினையாக இருக்கும் பசுவுக்கு ஊரார் வளைகாப்பு நடத்திய நெகிழ்ச்சி நிகழ்வு நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் மூங்கித்தாம்பட்டி கிராமத்தை சார்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவர் தனது வீட்டில் பசு மாட்டினை வளர்த்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் உள்ள ஒரு பசுமாடு சினையாக இருந்துள்ளது.
இதனையடுத்து, கருவுற்று இருக்கும் பசுவுக்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்து இருக்கிறார். பசுவுக்கு அங்குள்ள விநாயகர் கோவிலில் வளைகாப்பு நிகழ்ச்சியும் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், இந்த தகவல் கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த கிராம மக்களும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்வதுபோல உடையணிந்து விநாயகர் கோவிலுக்கு வருகை தந்தனர். இந்த சுப நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைவரும் சந்தனம் மற்றும் குங்குமத்தை எடுத்து பசுமாட்டை அலங்கரித்து, மாட்டின் கொம்பில் வளையலை மாட்டி வளைகாப்பு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு பரிமாறப்பட்டது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Pudukkottai Villagers Make Function to Cow Pregnant