அக்காவை வரன் பார்க்க சென்று, பெண்ணின் தங்கையை கரம்பிடித்த மணமகன்..! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி புதுக்கோட்டை விடுதி கிராமத்தை சார்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் ராஜ்குமார் (வயது 30). தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி மருங்குப்பள்ளம் கிராமத்தை சார்ந்தவர் முருகேசன். இவரது மூத்த மகளுக்கும், ராஜ்குமாருக்கும் திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவு செய்துள்ளனர். 

இதனையடுத்து திருமணத்திற்கு நிச்சயம் செய்து, ஆலங்குடியில் உள்ள கோவிலில் திருமண ஏற்பாடுகள் நேற்று நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு உற்றார், உறவினர்களை அழைத்து பத்திரிகைகள் வழங்கப்பட்ட நிலையில், கோவில் முன்னதாக சுவரொட்டிகளும் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மணப்பெண் திடீரென மாயமாகவே, மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு சென்று பேசியுள்ளனர். இதனையடுத்து பெண்ணின் தங்கையான 19 வயது ஆசிபாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, இருவரின் சம்மதத்தின் பேரில் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai man Marriage Accidentally


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->