புதுக்கோட்டை சிறுமி பாலியல் பலாத்காரம், கொலை.. கொடூர சித்ரவதைக்கு உள்ளாக்கி, துடிதுடிக்க அரங்கேறிய பயங்கரம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி ஆவுடையார்கோயில் அருகேயுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட வீட்டிலிருக்கும் பெண் ஒருவரின் 7 வயது மகள் ஜெயப்பிரியா, இரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் கடந்த 27 ஆம் தேதி மாயமான நிலையில், இவரை தேடி அலைந்த பெற்றோர் இவரை காணவில்லை என்பதால் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இது குறித்த புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், கடந்த ஒன்றாம் தேதி சிறுமி உடல் முழுவதும் காயத்துடன், கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுவதை கண்டறிந்துள்ளனர். 

இதுகுறித்து விசாரணை மேற்கொள்கையில், சிறுமியின் தந்தை கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், அவர் தினமும் பணிக்குச் சென்றுவிடுவார். மேலும், வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மட்டும் இருந்த நிலையில், சிறுமியை கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லாது தவித்து வந்தனர். இந்த விஷயத்தில், பக்கத்து வீட்டுக்காரரான பூ வியாபாரி ராஜா, சிறுமியை கவனித்து வந்துள்ளான். 

மேலும், சிறுமி விரும்பும் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து பழகி வந்த நிலையில், சம்பவத்தன்று தனியாக அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். பின்னர் சிறுமியின் உடல் முழுவதும் காமுக கொடூரன் போல கடித்து, பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை அளித்துள்ளான். 

ஈவுஇரக்கமே இல்லாமல் அரங்கேறிய கொடூரத்தின் உச்சமாக தனது வெறியை தீர்த்து, கழுத்தை அறுத்து கொலை செய்து அங்குள்ள புதர் மறைவில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளான். பின்னர் கடந்த 2 தினங்களாக பெற்றோருடன் சேர்ந்து நல்லவன் போல நடித்து இருந்ததும் இதில் அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai child sexual abuse murder police investigation report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->