வெளி நாட்டில் இருந்து வந்த இளைஞர் செய்த காரியம்.. போலிசார் அதிர்ச்சி.! பீதியில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


கொரோனா பீதியில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிலும் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்களால் தான் இந்த வைரஸ் அதிகம் பரவுகிறது. 

எனவே கடந்த இரண்டு மாதங்களாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் பட்டியலை கொண்டு அந்தந்த மாநில அரசு அவர்களை தேடி கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த சக்தி கண்ணன் என்பவர் கடந்த 22ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்திருக்கின்றார். ஆனால், வீடு திரும்பாமல் அவர் மாயமாகி இருக்கின்றார். 

விமான நிலையத்தில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவரை தேடி திருச்சி ஹோட்டல் ஒன்றில் கண்டுபிடித்திருக்கின்றனர். 

அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருச்சியில் இருக்கும் விடுதி ஒன்றில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்து அவரை பிடித்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவருடைய பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருக்கும் நிலையில் விடுதி எப்படி இயங்கியது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudhukottai men arrested by trichy police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->