#மதுரை || மாணவிக்கு பாலியல் தொந்தரவு - கல்லூரி பேராசிரியர் கைது - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக மதுரையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து நீதிபதி இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மதுரை சரக டிஐஜிக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து செக்கானூரணி போலீசார், விசாரணை நடத்தியதில் மாணவிக்கு கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர் ஜெகன் கருப்பையா (42) மற்றும் கல்லூரி மாணவி மாணவர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் ஜெகன் கருப்பையாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான கல்லூரி மாணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Professor arrested for sexually harassing a college girl in madurai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->