விஜயகாந்த் எப்பொழுது பிரச்சாரத்திற்கு வருகிறார்? தகவலை வெளியிட்ட பிரேமலதா!! உற்சாகத்தில் தொண்டர்கள்!!  - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற பிரேமலதா விஜயகாந்த், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசினார். அப்போது, பிரேமலதா விஜயகாந்த், "தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் சென்றுள்ளேன். நான் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களிலெல்லாம் அதிமுக கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

நாற்பது தொகுதிகளிலும் வென்றெடுப்போம். கடைசியாக வடசென்னையில் பிரச்சாரத்தை முடிப்போம். தற்போது வெளியிடப்படும் கருத்து கணிப்பு என்பது கருத்து திணிப்பு. உறுதியாக அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

Image result for ஜெயலலிதா seithipunal

தற்போது வருமான வரி சோதனை உள்ளிட்ட சம்பவங்கள் பல இடங்களில் நடந்து வருகின்றன. சட்டம் தனது கடமையை செய்கின்றது. எதிர்கட்சிகள் என்பதால் பழி வாங்கவில்லை. அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய பிரச்சாரம் எப்போதும் இப்படித்தான் இருக்கின்றது.

ஜெயலலிதா இல்லாததால் எல்லோருடைய என்னுடைய பிரச்சாரத்தை கவனிக்கின்றனர். அதனால், அவருடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர். எனது கடந்தகால பிரச்சாரங்களும் இதே போல தான் இருக்கும். எனக்கு என்று ஒரு தனி பாணி உள்ளது. விஜயகாந்த் விரைவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவார் இன்னும் இரண்டு நாட்களில் அதற்கான அறிவிப்பு வெளிவரும்' என அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

premalatha says about vijayakanth campaign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->