அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மின்தடை ஏற்பட கூடாது - அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மின்தடை ஏற்பட கூடாது - அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு.!

மின்வாரியம் சார்பில் அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- 
"அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். 

நிகழ்ச்சி ஆரம்பம் முதல் முடியும் வரை உதவி பொறியாளர் மின்விநியோகத்தை கண்காணிக்க வேண்டும். அவசரகாலத்தை தவிர அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் நிகழ்ச்சி நடக்கும் தினத்தன்று பராமரிப்பு தடைபடக் கூடாது. 

தமிழகம் முழுவதும் உள்ள துணைமின் நிலையங்களில் போதிய பணியாளர்கள் இருப்பதை செயற்பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அதேபோல், அவசர கால மின் தடையை சரிசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.

அதிலும் குறிப்பாக சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மின்சார வாரியம் தலைமை பொறியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

power board order no power cut in ministers programmes


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->