பணியில் இருந்த எஸ்.ஐ சுட்டு கொலை.! மர்ம நபர்கள் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் இருந்த காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரை மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

கன்னியகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் வில்சன், இவர்   பட்ந்தாலுமூடு அருகே உள்ள சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஒரு காரை சோதனை செய்ய அவர் தடுத்து நிறுத்தினார். அப்போது அந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் 3  ரவுண்ட் சுட்டுள்ளனர். இதில் உதவி ஆய்வாளர் வில்சன் தலை மார்பு மற்றும் கால் பகுதியில் குண்டு பாய்ந்து வில்சன் மயங்கி விழுந்தார்.

துப்பாக்கி சுடும் சத்தத்தை கேட்ட பிற காவலர்கள் வருவதற்குள் காரில் வந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். காயம் அடைந்த ஆய்வாளர் வில்சன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தார். இந்த சம்பவத்தால் கன்னியாகுமரி முழுவதும் வாகன சோதனையில் குமரி  மாவட்ட காவல்துறையினர் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

வழுக்கம்பாறை அருகே சொகுசு காரை சோதனை செய்த பொழுது பொம்மை துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

ஆய்வாளர் வில்சன் சுடப்பட்ட சம்பவம் தமிழக கேரள மாநில எல்லையில் பேரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police si murder in duty


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->