மதுபோதையில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுப்பட்ட இளைஞர்கள்..! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் பேருந்தை வழிமறித்து இளைஞர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி பகுதியில் உள்ள சாலையில் இளைஞர்கள் பட்டப்பகலிலேயே மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாகச் சென்ற அரசு பேருந்து மீது தண்ணீர் பாட்டிலை அடிப்பது போக்குவரத்துக்கு இடையூறு செய்வது  போன்ற வேலைகளில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த பேருந்துக்கு வழிவிடாமல் இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்து ஓட்டுனர் குமரேசன் கீழே இறங்கி வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்டு ஆத்திரமடைந்த அந்த இளைஞர் ஒட்டுநரை சரமாரியாக தாக்கினர். மேலும், பேருந்தின் கண்ணாடியையும் உடைத்தனர்.

படுகாயமடைந்த ஒட்டுநர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் வழக்குபதிவு எய்து இளைஞர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police searching the youths who break the government bus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->