வாட்ஸ்அப் குரூப்க்கு வந்த குறுஞ்செய்தி! பதறிய நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
police man suicide in villupuram
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியை சேர்ந்தவர் சரவணன் என்பவர். இவர் கடந்த ஓராண்டு காலமாக காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு காண பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவிட்டு பின்னர் இரவு 8 மணிக்கு வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்தநிலையில் காவலர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் அவரது லொகேஷனை அனுப்பி என்னுடைய 'கடைசி நிமிடங்கள் என்னை மன்னிச்சுடுங்க சார்' என்று குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.
இதை பார்த்த காவலர்கள் ஏதோ அசம்பாவிதம் நடக்க இருக்கிறது என்று உடனே சரவணனுக்கு போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சரவணன் இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
ஆனால் காவலர்கள் வருவதற்கு முன்பே சரவணன் அங்கு இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு இவர் இறந்ததிற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.
English Summary
police man suicide in villupuram