பிரிந்து சென்ற மனைவி.. சரமாரியாக தாக்கிய கணவருக்கு வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் பிரிந்து சென்ற மனைவியை தாக்கிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் காந்தீஸ்வரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் இசக்கிபாண்டி(34). இவரது மனைவி இசக்கியம்மாள் (27). இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இசக்கியம்மாள் தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் இசக்கியம்மாள் சுய உதவி குழுவில் பணம் செலுத்துவதற்காக நேற்று முன்தினம் வந்துள்ளார். அப்பொழுது அவரை வழிமளறித்த இசக்கி பாண்டியன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த இசக்கியம்மாள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மானூர் போலீசார், மனைவியை தாக்கி விட்டு தலைமறைவாக உள்ள இசக்கிபாண்டியனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police looking for The husband who assaulted his wife in tirunelveli


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->