மயிலாடுதுறை : காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை மகள் கனகலட்சுமி. பொறியியல் முதுகலை பட்டதாரியான இவர் எதிர்வீட்டில் வசிக்கும் சக்திவேல் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு சக்திலேவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால், இருவரும் பெற்றோரை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு கடலூரில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக எதிர் எதிர் வீட்டில் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக கனகலட்சுமி குடும்பத்தார், சக்திவேல் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவருக்கும் அடுத்த மாதம் முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில், செல்லதுரை விவசாய வேலைக்காக வெளியில் சென்று விட்டதால் கனகலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து செல்லத்துரை மாலை வேலைமுடித்து விட்டு வீடு திரும்பிய போது, கனகவட்சுமி இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கதறி துடித்துள்ளார். 

இதையடுத்து செல்லத்துரை, சக்திவேல் தான் என் மகளை அடித்து கொன்றுவிட்டதாகவும், தனது மகள் இதுவரை 2 முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகலட்சுமியின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police investigation to young woman murder case in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->