மற்றொரு மின்வெட்டு இருண்டகாலம் நமக்கு வேண்டாம் - மருத்துவர் இராமதாஸ்.!
PMK Dr Ramadoss Election Campaign at Mayiladuthurai Speech about DMK Power Cut Govt TN Eleciton 2021
மற்றொரு மின்வெட்டு இருண்டகாலம் நமக்கு வேண்டாம் என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகமே பாழடைந்துவிடும் என்றும் மருத்துவர் இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மயிலாடுதுறை பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது அவர் பேசுகையில், " திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மின்வெட்டு பிரச்சனை தொடரும். கடந்த 4 வருடமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் மின்வெட்டு பிரச்சனை இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மின்வெட்டு வரும். தமிழகம் இருண்டுபோகும். மற்றொரு இருண்ட காலம் நமக்கு வேண்டாம்.
அனைத்து தரப்பு மக்களும் சமநிலையோடு வாழ வேண்டும், சமத்துவத்தோடு வாழ வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தமிழகத்தில் 300 க்கும் மேற்பட்ட சமுதாயங்கள் இருக்கிறது. இந்த 300 சமுதாயமும் முன்னேற வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. நான் ஒரு போராட்டக்காரன் என்பது உங்களுக்கே தெரியும்.
திமுகவின் கொள்கை வரன் கொடுத்தவர் தலையில் கைவைத்த பத்மாசுரன் கதை தான். உங்களுக்கான வாய்ப்பை திமுகவிற்கு கொடுத்தால் அது பத்மாசுரன் கதைதான். உங்களின் தலையிலேயே அவர்கள் கைவைத்துவிடுவார்கள். தமிழகமே பாழடைந்துவிடும்.
திமுக செய்வது கார்ப்பரேட் அரசியல். பீகாரில் இருந்து பி.கே என்ற பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்து அரசியல் செய்து வருகிறார்கள். நாம் மக்களை நம்புகிறோம். பாமக அரசியல் பயணம் வைத்து பிரசாந்த் கிஷோருகே அரசியல் சொல்லிக்கொடுக்கலாம். பாட்டாளி மக்கள் கட்சியில் கொள்கை உன்னதமான கொள்கை. மயிலாடுதுறை தொகுதி மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டம் இன்னும் சிறந்து விளங்க வேண்டும். மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி வர வேண்டும். மயிலாடுதுறை மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் உள்ளது. அதனை கட்டாயம் செய்வோம். கொரோனா இரண்டாவது அலை பரவல் இருப்பதால் கவனமாக இருங்கள். முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
PMK Dr Ramadoss Election Campaign at Mayiladuthurai Speech about DMK Power Cut Govt TN Eleciton 2021