பண்ரூட்டி: யார்ரா நீ?. இஷ்டத்துக்கு பேசுற.. சங்கு ஊதுறோம் இரு - மரு. அன்புமணி மனதளவில் கொந்தளித்து பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


திமுக கட்சியின் சின்னத்தில் ஒரு தொகுதியில் களம்காணும் பண்ரூட்டி தொகுதி திமுக வேட்பாளர் வேல்முருகனின் சுயரூபம் குறித்து பல தகவலை தெரிவித்த மரு.அன்புமணி பரபரப்பாக பேசியது அங்கிருந்த பாட்டாளி சொந்தங்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தியது.

பண்ரூட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் இரா.இராஜேந்திரனை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " எதிரணியில் இருக்கும் வேட்பாளர் குறித்து சொல்ல தேவையில்லை. அவன் ஒரு ரவுடி, பொறுக்கி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களை செய்கிறவன். அவரது பெயரை கூட எனக்கு சொல்ல பிடிக்கவில்லை. ரவுடி திமுக கூட்டணியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். 

நான் பொதுவாக ஒருமையில், தவறாக பேசுவது கிடையாது. அது எனக்கு பிடிக்காது. ஆனால், இன்று பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. நான் முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். எதிரணியில் உள்ளவரை வளர்த்து ஆளாக்கி, பெரிய அளவுக்கு கொண்டு வந்து கட்சியின் உயரிய பொறுப்பிற்கு கொண்டு வந்தால், இறுதியில் அது பொறுக்கியாக இருக்கிறது. அவனை வளர்த்துவிட்டு தவறு செய்துவிட்டேன். தயவு செய்து அந்த பொறுக்கியை உங்களின் ச.ம.உவாக தேர்வு செய்ய வேண்டாம். 

234 தொகுதிகளையும் கணக்கிட்டு ஒரு பொறுக்கி வேட்பாளர் என்றால், அது அவன் தான். இந்த தொகுதி மக்கள் சுதாரிப்பாக இருக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள பெண்கள் நிம்மதியாக இருக்க வேண்டும், தொகுதி வளர்ச்சி பெற வேண்டும் என்றால் அதிமுகவிற்கு வாக்களியுங்கள். திமுகவிற்கு வாக்களித்தால் உங்களின் அமைதி சீரழிந்துவிடும். எதிர்க்கட்சி வேட்பாளரை பற்றி நன்றாக உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். 

உங்களிடம் வந்து நன்றாக நடிப்பான். தரையில் உருளுவான், அழுவான், மிரட்டுவான், என்னென்ன நாடகம் போடவேண்டுமோ அனைத்தும் போடுவான். பொறுக்கியை தயவு செய்து வேட்பாளராக தேர்வு செய்துவிடாதீர்கள். எதிர்தரப்பு மீது 4 பக்க அளவிற்கு புகார்கள் உள்ளது. இவன் குண்டர் சட்டத்தில் ஜெயலில் இருக்க வேண்டியவன். மொத்தமாக அவனின் மீது 13 காவல் நிலையத்தில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 3 கொலை முயற்சி. பண்ரூட்டி திமுக வேட்பாளரின் தகுதி இது. 

தமிழகத்தின் பல மாவட்டங்களில் அந்த ரவுடி வேட்பாளரின் மீது புகார் இருக்கிறது. அவன் வெற்றியடைந்தால் பெண்கள் நிம்மதியாக இருக்க முடியாது. கடலூர் நகரம் மட்டுமல்லாது மாவட்டமே அழிந்துவிடும். நீங்கள் அவனை தேர்வு செய்ய கூடாது. அவனைப்பற்றி சின்ன வயதில் இருந்து எனக்கு தெரியும். சென்னை திருவெற்றியூர் கம்பெனியில் செக்கூரிட்டியாக பணியாற்றி வந்தான். 

தற்போது, ராஜராஜ சோழனின் வாரிசு போலவும், கடலூர் பகுதி ஜமீன்தார் போலவும் பேசுகிறான். மருத்துவர் இராமதாஸ், பாமக, இந்த சமூகம் இல்லையென்றால் அவன் இல்லை. இந்த சமூகம் கடவுளாக பார்க்கும் மருத்துவர் இராமதாசை பற்றி அவதூறாக பேசுற.. எங்கிருந்துடா நீ வந்த?. உன் இஷ்டத்துக்கு பேசுற.. மருத்துவர் இராமதாஸ் தான் அவனை வளர்த்துவிட்டார். இந்த சமூகம் அவனை வளர்த்துவிட்டது. இனியும் அவன் அப்படி பேசினால், அவனது தாயை அவனே தவறாக பேசியதற்கு சமம். 

வருமான வரியே 4 வருடமாக அவன் கட்டவில்லை. கேட்டால் வருமானம் இல்லையாம். எப்படி அது?. நீ உன்னுடன் 20 பேரை கூட்டிக்கொண்டு போகிறாய். அதற்கு எப்படி உன்னிடம் பணம் இருக்கிறது. வருபவனுக்கு ஒருவேளை உணவு கூட வாங்கி கொடுக்காமல் இருக்கிறாயா?. இவனது மிரட்டலால் 7 நிறுவனங்கள் கடலூரை விட்டு வெளியே சென்றுவிட்டது. திட்டமிட்டு கம்பெனியை விரட்டிவிட்டு இருக்கிறான். அன்று 2 ஏக்கர் வைத்திருந்தவன், இன்று தென்னத்தோப்பில் திரைப்பட ரவுடி போல இருக்கிறான். 

வணிகர்கள், வியாபார பெருமக்கள் சிந்திக்க வேண்டும். உங்களின் சொத்துக்கள் அனைத்தும் காணாமல் போக வேண்டுமா?. திமுக சார்பில் எதிரணியில் நிற்பவனை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்களின் சொத்துக்களை இழந்து தெருவிரு வந்துவிடுவார்கள். என்னைப்போல அனைவரும் படிக்க வேண்டும் என்பதால், அரசியலுக்கு சேவை செய்ய நான் வந்துள்ளேன். எனது தம்பிகள், தங்கைகள் படித்து வேளைக்கு செல்ல வேண்டும். 

எதிர்க்கட்சி வேட்பாளரால் 500 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேசி பேசியே இளைஞர்களை அவன் வசம் வைத்துள்ளான். இளைஞர்களிடம் ஆசை காண்பித்து ஏமாற்றி, அவர்களை உபயோகம் செய்து நடுத்தெருவில் நிறுத்துகிறான். 

எனது தம்பிகள் கட்சிப்பணி செய்தால், அவர்களின் இல்லத்திற்கு ஆட்களை அனுப்பி மிரட்டுகிறான். எனது தம்பிகளின் பெற்றோரை மிரட்டுகிறான். மாவீரன் உயிருடன் இருந்த காலத்தில் மாவீரனை எதிர்த்து பேசினான். மாவீரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவன். இவன் சிறுபிள்ளைகள் மனதை மாற்றி விபரம் தெரியாத இளைஞர்களை பயன்படுத்திக்கொள்கிறான். மனம் மாறி வருபவர்களை நான் கட்டாயம் அன்போடு ஏற்றுக்கொள்வேன்.  உங்களின் வீடு, வீட்டு பெண்கள், எதிர்காலம் என அனைத்தையும் நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Cuddalore Panruti Speech about Velmurugan TN Election 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->