திருப்பூரில் பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோவில் அருகே கரட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சத்யா. பதினேழு வயதான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

ஆனால், இவருடைய தோழிகள் அரசுப்பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் சத்யா தானும் அதே பள்ளியில் படிக்க வேண்டும் என்று அடம்பிடித்தார். அதற்கு சத்யாவின் பெற்றோர் தனியார் பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்றுக் கட்டாயப்படுத்தி உள்ளனர். 

இதனால் கோபத்தில் இருந்து வந்த சத்யா நேற்று வகுப்புக்கு செல்லவில்லை. இது தொடர்பாக சத்யாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். பெற்றோர் திட்டிய வருத்தத்தில் இருந்த சத்யா இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாக மகளைக் காணவில்லை என்று பெற்றோர் தேடிய போது சத்தியா வீட்டில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதைப்பார்த்து பெற்றோர் கதறி அழுத்துள்ளனர். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பள்ளிக்குச் செல்லாததைப் பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

plus two student sucide in tirupur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->