நாகர்கோவில் : தேர்வுக்குத் தயாரான பிளஸ் 1 மாணவி தூக்குப் போட்டு தற்கொலை.!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே மங்காவிளை பகுதியை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன்-மல்லிகா தம்பதியினர். இவர்களுடைய மகள் ராஷிகா. இவர் ஈத்தா மொழியில் உள்ள அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இதற்கிடையே தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை ஆர்வமுடன் எழுதி வந்த ராஷிகா அடுத்தடுத்துள்ள தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றுமுன் தினம் மாணவி ராஷிகாவின் பெற்றோர்கள் வெளியில் சென்றதால் மாணவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். 

அப்போது மாணவி திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து தாய் மல்லிகா வீட்டிற்கு வந்தபோது ராஷிகா தூக்கில் தொங்கியதைப்பார்த்து கதறி அழுதார்.

இந்த சத்தம் கேட்டு பதறிப்போய் ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஷிகாவின் உடலை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும், போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

plus one student sucide in nagarkovil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->