பெரியார் என்பவர் தனி மனிதர் அல்ல ஒரு இயக்கம், பெரியாரை அழிக்க இன்னும் எவனும் பிறக்கவில்லை! - அமைச்சர் ஏ.வ வேலு! - Seithipunal
Seithipunal


நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல!

திமுக சார்பில் அண்ணா மற்றும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ஏவ.வேலு, சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

இதில் பேசிய அமைச்சர் ஏவ.வேலு" பெரியார் என்னும் பிம்பத்தை உடைக்க தமிழகத்தில் எவனும் பிறக்கவில்லை. பெரியார் என்னும் பிம்பத்தை உடைக்க முடியாததற்கு ஒரு ஆற்றல் இருக்கிறது. பெரியார் ஒரு தனி மனிதர் அல்ல அவர் ஒரு இயக்கம். அந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது" என பேசனார்.

இதை தொடர்ந்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் " அனைவரும் சமம், அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் முன்னேற்றம் இதுதான் திராவிட மாடல். நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தியை திணிக்க வேண்டாம் என்று சொல்கிறோம். வட இந்தியர்கள் தான் இந்தியியை பேச சொல்லி திணிக்கின்றனர். எங்களுக்கு தேவைப்பட்டால் இந்தியை கற்போம். பிற மாநிலங்களுக்கு சென்று தொழில் செய்ய வேண்டும் என்றால் அவர்களின் தாய்மொழியை நாம் கற்க வேண்டும்" என பேசி உள்ளார்.

தமிழக மாணவர்கள் இந்தியை கற்கவே வாய்ப்பு இல்லாத பட்சத்தில் தமிழர்கள் எவ்வாறு இந்தி பயின்று பிற மாநிலங்களுக்குச் சென்று தொழில் செய்வார்கள். இந்தியை கற்பதற்கான வாய்ப்பை திராவிட அரசு முதலில் ஏற்படுத்த வேண்டும். அப்படி ஏற்படுத்தினால் எதற்காக வட இந்தியர்கள் இந்தியை திணிக்கப் போகிறார்கள் என சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Periyar is not a single man he was a movement


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->