பெரியாரின் 144 -வது பிறந்தநாள் விழா : மரியாதை செலுத்தும் முதலமைச்சர்..! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், கடந்த ஆண்டு முதல் பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாகக் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது. 

அதனடிப்படையில், தமிழ்நாடு அரசின் சார்பில், பெரியாரின் 144வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு அண்ணா சாலையில் சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அருகில் உள்ள உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த இருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

periyar 144th birthday chief minister respect in periyar statue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->