அடேய்! இரவு புல் போதையில் திருட்டு, காலை அரை போதையில் திருடிய இடத்திலேயே விற்க முயற்சித்த போதை திருடன்.!
perampalur kavul palaiyam robbery
பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. இவரது மகன் பிரதாப். இவர் பொக்லைன் எந்திரங்கள் சரிபார்க்கும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் கடந்த 26-ம் தேதி ரூ.5000 மதிப்பிலான இரண்டு தாமிர கம்பிச்சுருள் திருட்டு போனது.
இந்த நிலையில் நேற்று காலை அவரது பட்டறைக்கு ஒருவர் இரண்டு தாமிர கம்பிச்சுருளை விற்க வந்துள்ளார். அந்த கம்பிச்சுருள்களை பிரதாப் வாங்கி பார்த்தபோது, அதில் அவரது பட்டறை பெயர் இருந்துள்ளது. இதனை கண்டு பிரதாப் அதிர்ச்சியடைந்தார்.
இதனால் அவற்றை அந்த நபர்தான் திருடிச்சென்றிருப்பார் என்று சந்தேகமடைந்த பிரதாப் அவரையும், அவருடன் சரக்கு வாகனத்தில் வந்திருந்த இரண்டு பேரையும் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பிடித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோதையில் தாமிர கம்பிச்சுருள்களை அவர் திருடிச்சென்றதால், எந்த பட்டறையில் திருடியது என்பது கூட தெரியாமல், அதே பட்டறையில் தாமிர கம்பிச்சுருள்களை விற்க வந்தது தெரிய வந்துள்ளது.
English Summary
perampalur kavul palaiyam robbery