மருத்துவமனைக்கு சென்று நடந்தே வந்த கர்ப்பிணி பெண்.. உதவி செய்த காவல்துறை... வைரலாகும் காணொளி.!!
perampalur district police help pregnant girl to go home
கரோனா வைரஸின் தாக்கமானது தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நபர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,937 ஆக உயர்ந்துள்ளது. பூரண நலன் பெற்று இல்லங்களுக்கு 81 பேர் திரும்பியுள்ளனர். தமிழகத்தின் பலி எண்ணிக்கை 25 ஆக இருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கர்ப்பிணி பெண்ணொருவர் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வெயிலில் நடந்துகொண்டு இல்லத்திற்கு திரும்பியுள்ளார். இந்த விஷயத்தை கண்ட சோதனையில் ஈடுபட்டு இருந்த காவல்துறை அதிகாரிகள், பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் அவருக்கு உதவியாக இருக்கும் பொருட்டு காவல் துறை வாகனத்தில் அவரது இல்லத்திற்கு செல்ல வழிவகை செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
perampalur district police help pregnant girl to go home