பவானி பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது! - Seithipunal
Seithipunal


பவானி பேருந்து நிலையத்தில் 1½ கிலோ கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்த போலீசார்;  

பவானியில் கஞ்சா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பவானி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையில் ஈடுபட்டனர். 

நேற்று காலை போலீசார் பவானி பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த இடத்தில் சந்தேகம் அளிக்கும் வகையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். 

பின்னர் அவரை பிடித்து விசாரணை செய்த போது அவரது பையில் 1½ கிலோ கஞ்சா பொருட்கள்   விற்பனை செய்யும் வகையில் இருந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய போது, அவர் பவானி காவேரி வீதி, கந்தன் பட்டறை பின்புறம் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் மனைவி மகேஸ்வரி (வயது 26) என தெரியவந்தது. 

அதனை தொடர்ந்து மகேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pavani bus stand ganja sales teengirl arrested


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->