#BREAKING | அதிமுக எம்பி ஓபிஆர்! அழைப்பு விடுத்த டெல்லி! பெரும் அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில், அதிமுகவின் எம்பியாக, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தின் மகன், ஓ பி ரவீந்திரநாத் எம்பி கலந்து கொள்ள இருப்பதாக, அதிகாரப்பூர் கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவரின் டிவிட்டர் பதிவில், "நாளை (20.07.2023) புதுடெல்லியில் தொடங்கவிருக்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று (19.07.2023)  மாலை 05:30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)  சார்பாக மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்கள் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி  (NDA) அழைப்பு விடுத்ததின் பேரில் அ.இ.அ.தி.மு.க சார்பில் கழக மக்களவை தலைவராக நான் கலந்து கொண்டு  சிறப்பித்து ஆலோசனை வழங்க உள்ளேன்." என்று ஓ பி ரவீந்திரநாத் எம்பி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் மகன் ரவீந்திரநாத் நீக்கப்பட்டு, ரவீந்திரநாத் அதிமுகவின் எம்பி கிடையாது என்று, அதிமுக தரப்பில் இருந்து பாராளுமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவின் எம்பியாக ரவீந்திரநாத் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parliament all party meet call ADMK MP OPR


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->