LKG சேர்பதற்காக இரவு முழுவதும் பள்ளியிலேயே பாய் போட்டு படுத்த பெற்றோர்கள்.!  - Seithipunal
Seithipunal


தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் எல்கேஜி சேர்பதற்காக விடிய, விடிய பெற்றோர்கள் பள்ளியின் வளாகத்திலே காத்திருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் ஸ்ரீ சங்கரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அடுத்து வரும் கல்வி ஆண்டின் மாணவர்கள் சேர்க்கைக்கான கடிதம் இன்று காலை 9 மணி முதல் பெறப்படும் என ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுடிருந்தது. 

இந்த நிலையில், மாணவர்கள் சேர்க்கைக்கான கடிதத்தை கொடுப்பதற்காக நேற்று மாலை முதலே  சங்கரா வித்யாலயா மெட்ரிக்  பள்ளிக்கு பெற்றோர்கள்  வர தொடங்கினர், நேற்றிரவு இரவில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கொசுக்கடி என எதனையும் பொருட்படுத்தாமல் பள்ளியின் வளாகத்திலே இரவு முழுவதும் காத்திருந்தனர்.

இந்த பள்ளியில் எல்கேஜி வகுப்பிற்கு மொத்தம் 80 இடங்கள் மட்டுமே உள்ளது, ஆனால் 200க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்கள் மாணவர்கள் சேர்க்கைக்கான கடிதத்தை கொடுப்பதற்காக 
 காத்திருந்தது குறிப்படதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parents sleep in school for his child admission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->