அவரு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்... உச்சக்கட்ட காமெடியில் கலாய்த்து தள்ளிய ஓ.பி.எஸ்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேற்கு மாவட்ட மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் சிறப்பிக்கப்பட்டது. இந்த நாளையொட்டி போரூரை அடுத்துள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியில் நடைபெற்ற நிலையில், இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வம் மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா, மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர்களை தூவி அஞ்சலியை செலுத்திய நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இது தொடர்பான பேட்டியில் ஓ.பி.எஸ் தெரிவித்தாவது, 

தமிழ் சமூகம் தலைநிமிர்ந்து வாழ்ந்திட வழி செய்தவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா. செம்மொழி மாநாடு என்ற பெயரில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த நிதியினை வீணடித்த நபர்கள் திமுக கட்சியினர். 

மொழிப்போர் தியாகிகள் தினத்தில் அஞ்சலி செலுத்தும் தகுதி அதிமுகவிற்கு மட்டும் தான் உண்டு. தமிழகம் கல்வியில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், படித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

ஒரு வருடத்திற்குள்ளாகவே 9 மருத்துவ கல்லூரிகளை கொண்டுவந்துள்ள அரசாக அதிமுக அரசு இருந்து வருகிறது. முந்தையை காலத்தில் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த திமுக எந்த திட்டத்தையும் கொண்டு வரவவில்லை. 

திமுக தலைவர் என்றுமே முதல்வராகும் வாய்ப்பு இல்லை. வடிவேல் நகைச்சுவையை போல, நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட என்பது தான் அவரது கதை என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

panneerselvam speech vadivel comedy for Stalin dream


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->