பெரம்பலூர்: விவசாயி வைத்திருந்த வெங்காயம் திருடு போனது.! போலீசார் அதிர்ச்சி.!
onion theft in perambalur
தன்னுடைய வயலில் விதை விதைப்பதற்காக விவசாயி வைத்திருந்த வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரம்பலூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
கூத்தனூர் என்ற கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் வெங்காய விவசாயி, தன்னுடைய வயலில் விதை விதைப்பதற்காக ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள 300 கிலோ சின்ன வெங்காயத்தை தன்னுடைய குடோனில் வைத்து இருந்துள்ளார்.
வெங்காயத்தின் விலையானது, ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், விவசாயி முத்துகிருஷ்ணன் மர்ம நபர்கள் சிலர் வைத்திருந்த வெங்காய மூட்டைகளை திருடி சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, முத்துகிருஷ்ணன் கூத்தனூர் காவல்நிலையத்தில் தான் வைத்திருந்த வெங்காயம் திருட்டுப்போனது குறித்து புகார் அளித்து இருக்கின்றார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
onion theft in perambalur