பெற்றோர் கவனக்குறைவால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!
one year child died in power
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் -பவித்ரா தம்பதி, இவர்களுக்கு ஒன்றரை வயதில் அனன்யா என்ற பெண் குழந்தை இருந்தது. இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல்பள்ளிப்பட்டில் உள்ள தாய் வீட்டிற்கு குழந்தையுடன் வந்த பவித்ரா 4 நாட்களாக அங்கேயே தங்கி உள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை பவித்ரா குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் கருவியை, குடத்தில் பொருத்தி வைத்து வெண்ணிர் வைத்துள்ளார். அப்போது, விளையாடிக்கொண்டு இருந்த ஒன்றரை வயது குழந்தையான அனன்யா தவறுதலாக தண்ணீரில் கையை வைத்த போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தது. குழந்தையின் அலறல் சந்தம் கேட்டு தாய் பவித்ரா மற்றும் உறவினர்கள் குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வாணியம்பாடி காவல் துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்றோரின் கவனக்குறைவால் திறந்தவெளியில் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தி ஒன்றரை வயது குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
English Summary
one year child died in power