ஸ்ரீ ரங்கம் கோவிலில் அடுத்தடுத்து நடந்த கொடூரம் - ஒருவர் சாவு; ஒருவர் மாயம்.! - Seithipunal
Seithipunal


ஸ்ரீ ரங்கம் கோவிலில் அடுத்தடுத்து நடந்த கொடூரம் - ஒருவர் சாவு; ஒருவர் மாயம்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள, பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்தவர் செல்வி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தூர் செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இந்த நிலையில் புதுமண தம்பதியினர் இருவரும் இன்று தன் குடும்பத்தினருடன் காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். இதையடுத்து இவர்கள் மேலூர் சாலை அருகே காரை நிறுத்திவிட்டு இறங்க முயற்சி செய்த போது ராஜா மயங்கிய நிலையில் இருந்துள்ளார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கதிர்காபாளையத்தை சேர்ந்த ரஜினி முருகேசன் என்பவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று சாமி கும்பிட வந்துள்ளார். அதன் பின்னர் அவர் திடீரென காணாமல் போய்விட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக ரஜினி முருகேசனின் உறவினர் தண்டபாணி, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், காணாமல் போன ரஜினி முருகேசனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one man died and one man missing in sri rangam temple


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->