கொடைக்கானல் || தறிகெட்டு ஓடிய வேன் - ஒருவர் பலி; 15 -க்கு மேற்பட்டோர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கொடைக்கானல் || தறிகெட்டு ஓடிய வேன் - ஒருவர் பலி; 15 -க்கு மேற்பட்டோர் படுகாயம்.!

துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காதர்மீரா நகரைச் சேர்ந்த பதினைந்துக்கும் மேற்பட்டோர் நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதே போன்று  விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 32 சுற்றுலாப் பயணிகள் மற்றொரு வேனில் கொடைக்கானலுக்கு வந்தனர்.

இந்த நிலையில், விழுப்புரத்திலிருந்து வந்தவர்களின் வேன், பைன் மரக்காடு உள்ள இறக்கமான பகுதியில் திடீரென பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற துாத்துக்குடி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் துாத்துக்குடி பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரண்டு பகுதியிலிருந்தும் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களையும் உயிரிழந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one man died and 15 more peoples injured for accident in kodaikanal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->