அதிரடி காட்டிய அதிகாரிகள் - சென்னை விமான நிலையத்தில் 1 கோடி தங்கம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


துபாயில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த விமானம் ஒன்று மீண்டும் உள்நாட்டு விமானமாக டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். இதனால், விமான ஊழியர்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் இருக்கை ஒன்று தூக்கி கொண்டு இருந்தது. 

இதை பார்த்த விமான ஊழியர்கள் அதனை சரி செய்தபோது இருக்கைக்கு அடியில் பார்சல் ஒன்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விமான ஊழியர்கள் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து அந்த பார்சலை ஆய்வு செய்ததில் அபாயகரமான பொருட்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த பார்சலை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். 

அதில் பிளாஸ்டிக் பவுச்சுக்குள் தங்க பசை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இந்த சம்பவம் குறித்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் படி சுங்க இலாகா அதிகாரிகள் விரைந்து வந்து சுமார் ரூ.73 லட்சம் மதிப்புள்ள 1.25 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். 

இதேபோன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் வந்த பெண் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்ததில், அந்த பெண்ணிடம் இருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள 473 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 1.73 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one crore gold seized in chennai airport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->