ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகளின் கதி என்ன?
Omni bus overturn accident
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 15 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து இன்று காலை உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள ஆசனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Omni bus overturn accident