ஒரே நேரத்தில் இரு காதல் ஜோடிகள்.. ஓமலூர் காவல் நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு.!
Omalur women police station issue
சேலம் மாவட்டம் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 காதல் ஜோடிகள் ஒரே நேரத்தில் பாதுகாப்பு வேண்டி தஞ்சமடைந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓமலூர் பகுதியில் ரக்கிபட்டி பகுதியில் வசித்து வந்த ஒரு இளைஞர் தர்மபுரியை சேர்ந்த இளம்பெண்ணை பெற்றோர் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கொண்ட பெற்றோர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்த காதல் ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்டு இரு வீட்டினரும் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அதே காவல் நிலையத்திற்கு வந்தனர். காவல் ஆய்வாளர் இந்திரா அந்த காதல் ஜோடிகளில் பெற்றோர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சமாதானம் பேசி அனைவரையும் அனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு முன்பாக அந்த இளம் ஜோடிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குவிந்து தகராறில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓமலூர் காவல் நிலையத்திற்கு இது போல அடிக்கடி காதல் ஜோடிகள் வருவது வழக்கமாக இருப்பதால் எப்பொழுதும் அப்பகுதி பரபரப்புடன் காணப்படும்.
English Summary
Omalur women police station issue