உங்கள் பிள்ளைகளும் நடுரோட்டில் தட்டேந்தி நிற்பார்கள் - வித்யாராணி பரபரப்பு பேச்சு.!
ntk candidate vidhyarani election campaighn
நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வீரப்பன் மகள் வித்யா ராணி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் படி, இன்று தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில், வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, “எனது பெற்றோர் வளர்ப்பில் நான் வளரவில்லை. நல்ல சூழலில் நான் வளர்ந்ததால் நல்ல முறையில் வளர்ந்து நன்றாக படித்தேன்.
இதுபோன்ற சூழல் எனது தந்தைக்கும் கிடைத்திருந்தால் தவறான வழிக்கு போயிருக்க மாட்டார். எனது தந்தை கிராமத்தில் எத்தனை பேர் சந்தனமரத்தை வெட்டி, தந்தங்களை கடத்தினார்கள்.
எனது தந்தை மட்டும் தான் செய்தாரா? வாங்கியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று நீங்கள் மலையை உடைத்து விற்பதும் திருட்டு தானே?. நாளை உங்கள் பிள்ளைகளும் நடுரோட்டில் தட்டேந்தி நிற்பார்கள்” என்று பேசினார்.
English Summary
ntk candidate vidhyarani election campaighn