திருக்கழுங்குன்றம் : சமூக ஆர்வலரை வெட்டி கொலை செய்த 9 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


திருக்கழுங்குன்றம் : சமூக ஆர்வலரை வெட்டி கொலை செய்த 9 பேர் கைது.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுங்குன்றம் பகுதியில் ருத்ரன் தெருவைச் சேர்ந்தவர் சர்புதீன், இவர் நேற்று மதியம் மேட்டுமங்கலம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டுத் தன் காரில் ஏறி அமர்ந்துள்ளார்.

அப்போது அவரது காரை ஒன்பது பேர் கொண்ட கும்பல் சூழ்ந்து கொண்டு சர்புதீனை காருக்குள் வைத்தே சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சர்புதீனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்தனர்.

அதில், சர்புதீன் சமூக ஆர்வலர் என்பதும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக வழக்குப் போட்டதால் அவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இந்த வழக்குத் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சர்புதீனை கொலை செய்த ஒன்பது பேரை கைது செய்தனர்.
சமூக ஆர்வலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nine peoples arrested for kill Social activist in chengalpattu


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->