நெய்வேலி என்.எல்.சி. விபத்து.. தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் அனல்மின் நிலையத்தில் இன்று திடீரென பாய்லர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் 18 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் படுகாயத்துடன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் என்.எல்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலர் மோசமான தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர்.

இந்நிலையில், தற்போது வரை 6 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இந்த விபத்துகள் அரங்கேறியுள்ளதாக பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட 18 பேர் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர் என்.எல்.சி சுரங்கத்தின் வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர், பாலியனாவர்களுக்கு ரூ.3 இலட்சம் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், ரூ.1 இலட்சம் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு, ரூ.50 ஆயிரம் லேசான காயம் அடைந்த நபர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Neyveli NLC Boiler Blast CM Regret and announce relief fund


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->