#Breaking: நெய்வேலி பாய்லர் வெடித்து விபத்து.. 4 பேர் பலி.. மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல்மின் நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும், இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகியுள்ளது. மேலும், விபத்துகளுக்கு தகுந்த மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதா? எதனால் விபத்துகள் ஏற்படுகிறது? என்ற கேள்விக்கான விடைகள் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது. 

இன்று சுமார் 300 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அனல்மின்நிலையத்திற்குள் பணியாற்றி வந்த நிலையில், திடீரென பாய்லர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் 18 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் படுகாயத்துடன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், இவர்கள் என்.எல்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலர் மோசமான தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இந்த விபத்துகள் அரங்கேறியுள்ளதாக பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Neyveli NLC Boiler Accident 01 July 2020 4 died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->