தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை- சென்னை வானிலை ஆய்வு மையம்.!
Next 24 hours rain in tamilnadu
சென்னையில் இன்று அதிகாலை முதல் திடீரென மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள வானிலை குறிப்பில், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யும் என தெரிவித்திருந்தார்.
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தலைநகரான சென்னையில் இன்று காலை முதல் திடீரென பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு, புரசைவாக்கம், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Next 24 hours rain in tamilnadu