சென்னையில் வேகமாக பரவி வரும் புதிய வகை வைரஸ் காய்ச்சல்.. அரசு எச்சரிக்கை.!
New virus fever spread in Chennai
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா நோய் தொற்றுக்குப் பிறகு பொதுமக்கள் தற்போது தான் சகஜமாக வெளியே வர தொடங்கியுள்ளனர். ஆனால் சமீப காலமாக பருவநிலை மாற்றங்களால் புதிய வகை வைரஸ் நோய்கள் பரவி வருகின்றன.
அதன் காரணமாக மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் முதியவர்கள் என இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பாதித்து வருகிறது.
சாதாரண சளி இருமல் காய்ச்சலால் மாத்திரை மருந்து எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். ஆனால் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்படுவோர் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் காய்ச்சல் விட்டாலும் 15 நாட்களுக்கு மேலாக தொண்டை வலியால் அவதிப்படுகின்றனர்.
அதன்படி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த காய்ச்சல் பரவி வருகிறது. 7 நாட்களுக்குள் காய்ச்சல் குணமானாலும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் தொற்றிக் கொள்கிறது.
இந்த வகை பாதிப்புகள் தீவிரமடையாமல் ஒரு வாரத்திற்குள் குணமாகிவிடும் என பொது சுகாதாரத்துறை மருத்துவ இயக்குனர் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் தனிநபர் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
New virus fever spread in Chennai